சென்னை ஐஐடியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! இன்று எத்தனை பேருக்கு தெரியுமா?

சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
சென்னை ஐஐடியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! இன்று எத்தனை பேருக்கு தெரியுமா?
Published on
Updated on
1 min read

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராதாகிருஷ்ணன், சென்னை ஐஐடியில் கொரோனா தொற்றால் மேலும் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிப்பு எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்த அவர், தமிழகத்தில்  உருமாறிய கொரோனா இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கூறினார்.

தினசரி கொரோனா பரிசோதனையை அதிகரிக்க திட்டமிட்டுளதாக தெரிவித்த ராதாகிருஷ்ணன், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறினார்.   

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com