
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முன்னாள் உதவி காவல் ஆணையர் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்து அவருக்கான தண்டனை விவரத்தை அறிவிக்க வரும் ஏப்ரல்- 19 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
ஊழல் தடுப்பு வழக்குகள்
சென்னை முகப்பேரை சேர்ந்தவர் வசந்தகுமார். 1991- ல் இருந்து 2000 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வந்த இவர், மதுரை உதவி காவல் ஆணையராக பணி புரிந்து பின் ஓய்வு பெற்றார். பதவியில் இருந்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, வசந்தகுமாருக்கு எதிராக, சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வருமானத்தை மீறி சொத்து சேர்த்தை ஒப்புக் கொண்ட விசாரணை நீதிமன்றம், சொத்தின் மதிப்பு 50 சதவீதத்திற்கு மேல் மிகாததால், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக கருத முடியாது எனக்கூறி வழக்கில் இருந்து வசந்தகுமாரை விடுவித்தது.
மேலும் படிக்க | சீட்டைக் காண்பித்து சீட்டிங் செய்த அண்ணாமலை
லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மேல்முறையீடு
இந்த தீர்ப்பு, அரசு ஊழியர்கள் மத்தியில் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்றும், ஊழல் தடுப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையிட்டு மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி வாதிட்டார்,பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் முன்னாள் உதவி காவல் ஆணையர் வசந்தகுமார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உத்தரவிட்டார்.
மேலும் படிக்க| ஐபோனை தொலைத்த நடிகை ஷாலு ஷம்மு... காவல்நிலையத்தில் புகார்!!
மேலும், அவரை விடுதலை செய்து பிறப்பித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த நீதிபதி, வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வசந்தகுமாருக்கு உத்தரவிட்டார். அன்றைய தினம், அவருக்கான தண்டனை விவரத்தை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.