அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கண்டன போராட்டங்கள் பேரணிகள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்படுகிறது. மோடி அரசு உடனடியாக இந்த விலைவாசி உயர்வை திரும்ப பெற வேண்டும்.