தமிழ்நாட்டில் ஜூன் 28 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நோய்த்தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனினும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.