நீட் தேர்வு விலக்கு குறித்து 3 நாட்களுக்குள் பதிலளிக்கப்படும் - மா.சுப்பிரமணியன்!

நீட் தேர்வு விலக்கு குறித்து 3 நாட்களுக்குள் பதிலளிக்கப்படும் - மா.சுப்பிரமணியன்!
Published on
Updated on
1 min read

நீட் தேர்வு விலக்கு குறித்து விளக்கம் கேட்ட மத்திய அரசுக்கு மூன்று நாட்களுக்குள் பதிலளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா,சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வு எழுதுவதற்கு தமிழ்நாட்டில் மொத்தம் 1 லட்சத்து 44 ஆயிரத்து 783 பேர் பதிவு செய்ததாகவும், அவர்களில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 516 மாணவர்கள் எழுதியதாகவும் கூறியுள்ளார். நீட் தேர்வின் முடிவில் 78 ஆயிரத்து 693 மாணவர்கள் தேர்வாகியுள்ளதாகவும் தெரிவித்த அவர்,  மருத்துவ கலந்தாய்வை ஒரே நேரத்தில் மத்திய - மாநில அரசுகள் நடத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நீட் தேர்வு விலக்கு குறித்து விளக்கம் கேட்ட மத்திய அரசுக்கு மூன்று நாட்களுக்குள் பதிலளிக்கப்படும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், செந்தில் பாலாஜி விவகாரத்தால் ஓமந்தூரார் மருத்துமனையில் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை என்றும், மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது எனவும் விளக்கமளித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com