ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12-ம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்று..! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்று வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12-ம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்று..! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் உள்ள ஐ.டி.ஐ.க்களில் படித்து விட்டு, மேற்படிப்பைத் தொடர முடியாத சூழலைக் கருத்தில் கொண்டு, ஐ.டி.ஐ.-களில் படிப்பவர்களுக்கு 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் என்று தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

இதனை செயல்படுத்தும் விதமாக, 8-ம் வகுப்புக்குப் பின் ஐ.டி.ஐ. -களில் சேர்ந்து படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும், 10-ம் வகுப்புக்கு பின் ஐ.டி.ஐ. சேர்ந்து படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் பள்ளிக்கல்வித்துறை மூலம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஐ.டி.ஐ.  பயிலும் மாணவர்கள் உயர்கல்வியை தொடரும் வகையிலேயே இணை சான்று வழங்கப்படுவதாகவும், இது அரசு வேலைவாய்ப்புக்கோ அல்லது இதர வேலைவாய்ப்புக்கோ பொருந்தாது என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com