30ம் தேதி  8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!!

30ம் தேதி  8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் வரும் 30ம் தேதி  8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,  நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, உள்ளிட்ட 8  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com