அடுத்த 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு...வரும் 18 ஆம் தேதி வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை...!

Published on
Updated on
1 min read

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பொழிய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் 7  நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு   மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும்  மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று  வீசக்கூடும் என்பதால் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் 18 ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com