வரும் 28 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுசேரியில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

வரும் 28 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுசேரியில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
Published on
Updated on
1 min read

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் 28 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வரும் 27ம் தேதி மற்றும் 28ம் தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com