கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் தேதியில் மாற்றம்...!

கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் தேதியில் மாற்றம்...!
Published on
Updated on
1 min read

ஜூன் 3 ஆம் தேதி நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு விழாவில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜூன் 3 ஆம் தேதி  திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 15 ஆம் தேதி  கலைஞர் கோட்டம் திறப்பு விழா மற்றும் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, வடசென்னையில் ஜூன் 3 ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும், கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நடைபெறும் என்றும், தொடர்ந்து, ஜூன் 5 ஆம் தேதி கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com