முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு...

கடந்த அதிமுக ஆட்சியில் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டிருந்தால் அவற்றின் பட்டியலை வெளியிடுமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சேகர்பாபு சவால் விடுத்துள்ளார். 
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு...
Published on
Updated on
1 min read

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆட்சி காலத்தில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 ஆயிரத்து 700 கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறிவது உண்மை எனில், அவற்றின் பட்டியலை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மேலும், அவ்வாறு கோவில் நிலங்கள் மீட்கப்பட்டிருந்தால், சிவகங்கையில் உள்ள கௌரி விநாயகர் கோவிலுக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலம் முன்னாள் அமைச்சரிடம் இருந்து ஏன் மீட்கப்படவில்லை எனவும் கேள்வி எழுப்பினார். அதேசமயம் கடந்த 55 நாட்களில், 520 கோடி ரூபாய் மதிப்பில் கோவில்களுக்கு சொந்தமான  79 புள்ளி 5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com