தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
Published on
Updated on
1 min read

மேற்கு  திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 19ஆம் தேதி வரை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

இன்று மற்றும் நாளை கர்நாடக கடலோரப் பகுதிகள், மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com