செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் நேரில் ஆய்வு...

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் நேரில் ஆய்வு...
Published on
Updated on
1 min read

முதலில், பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரிக்குச் சென்ற அவர், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, செங்கல்பட்டு நோக்கிச் சென்ற அவர்,செல்லும் வழியில், சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களைச் சந்தித்தார். காரை விட்டு கீழே இறங்கி, அவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், சிறுமி ஒருவரை வழியில் சந்தித்தார். அப்போது, அந்தச் சிறுமி முதலமைச்சருடன் செல்பி எடுத்துக் கொண்டார். 



இதை அடுத்து, வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் நிவாரண முகாமாக மாற்றப்பட்டுள்ள மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குச் சென்றார். அங்கு, தங்க வைக்கப்பட்டுள்ள இருளர் இன மக்கள் 30 பேருக்கு பட்டா வழங்கினார். பின்னர், மாம்பாக்கம் - முடிச்சூர் சாலையில் உள்ள கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com