
சென்னை வரும் பிரதமர் மோடியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
2 ஆயிரத்து 467 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய விமான நிலைய முனையம் உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். அவர் வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னைக்கு வரும் பிரதமர் மோடியை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, நீட் தேர்வு விலக்கு, நிலக்கரி விவகாரம், ஆன்லைன் ரம்மி தடை மசோதா, ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து பிரதமரிடம் மனு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.