முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர்  பயணம்...  கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு...

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று திருவார் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர்  பயணம்...  கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு...
Published on
Updated on
1 min read
தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் இன்னும் முழுமையாக கட்டுபாட்டிற்குள் வராத நிலையில், கொரோனாவுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூக்கு செல்கிறார். மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாலை வழியாக இன்று மதியம் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த கருணாநிதி அவர்களின் இல்லத்தில் அவர் மரியாதை செலுத்த உள்ளார். அதன் பின்னர், காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு மரியாதை செலுத்திய பின்னர், பயணத்தை முடித்து விட்டு நாளை சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com