அரசு துறை சார்ந்த திட்டங்களுக்கான...அரசு மானிய காசோலையை வழங்கினார் முதலமைச்சர்!

அரசு துறை சார்ந்த திட்டங்களுக்கான...அரசு மானிய காசோலையை வழங்கினார் முதலமைச்சர்!
Published on
Updated on
1 min read

இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த திட்டங்களுக்கான அரசு மானிய காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அரசு மானிய காசோலையை வழங்கிய முதலமைச்சர் :

சென்னை, தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 88 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கு அரசு மானியமாக 3 கோடி ரூபாய் காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதனை தொடர்ந்து, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் தமிழக அரசு இதழில் சார்பில் தயாரிக்கப்பட்ட  “இலக்கிய மலர் 2023” என்ற சிறப்பு மலர் -ஐ முதலமைச்சர் வெளியிட்டார்.

அதேபோல் விருதுநகர் மாவட்டம் பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கங்களில் பிரதிநிதிகள் தொழிலாளர் நல வாரியத்திற்கு 5 கோடி ரூபாய்க்கான நிதியினை வழங்கினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com