கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஒட்டர்பாளையத்தில் கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமியை, கோபிராசிபுரத்தை சேர்ந்த கோபால்சாமி என்பவர், தமது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும்படி செய்துள்ளார். மனு கொடுக்க சென்றவரின் காலில் கிராம உதவியாளர் முத்துசாமி விழும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது.