கல்லூரி பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவர் உயிரிழப்பு- சக மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

கல்லூரி பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவர் உயிரிழப்பு- சக மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
Published on
Updated on
1 min read

சேலத்தில் கல்லூரி பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவர் உயிரிழந்ததை கண்டித்து, சக மாணவர்கள் பேருந்துகளை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கோட்டை பகுதியை சேர்ந்த அப்துல்கலாம் என்பவர் சேலம் சின்னதிருப்பதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று அவர் வளைவில் திரும்பிய கல்லூரி பேருந்திலிருந்து இறங்க முயன்றபோது, அப்பேருந்தின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனைத்தொடர்ந்து இன்று கல்லூரி வந்த மாணவர்கள், கல்லூரி பேருந்துகளை வழிமறித்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகம் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் எட்டாததால் போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com