ஆன்லைன் வகுப்பில் பாடம் நடத்தாமல் ஆபாச புகைப்படங்களை கேட்ட ஆசிரியர்!!

கோவையில் ஆபாச புகைப்படம் அனுப்பும்படி மாணவ, மாணவிகளை வற்புறுத்துவதாக ஆசிரியர் மீது புகார் எழுந்துள்ளது.
ஆன்லைன் வகுப்பில் பாடம் நடத்தாமல் ஆபாச புகைப்படங்களை கேட்ட ஆசிரியர்!!
Published on
Updated on
1 min read

கோவை வெள்ளலூர் அரசு பள்ளியில் கணினி ஆசிரியருக்கு எதிராக மாணவ, மாணவிகள் இன்று காலை முதலே ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

ஆன்லைன் வகுப்பின்போது ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், ஆபாச புகைப்படம் அனுப்பும்படி மாணவ, மாணவிகளை வற்புறுத்துவதாகவும் ஆசிரியர் மீது  புகார் கூறி உள்ளனர். 

இந்நிலையில், ஆசிரியரின் செல்போன் வாயிலாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியை ஆதாரமாக வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் வலியுறுத்துகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, மாணவர்களிடம் பள்ளி நிர்வாகமும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, பள்ளி நிர்வாகம் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறி உள்ளது. 

மேலும்,பாதிக்கப்பட்ட மாணவிகள் காவல்துறையில் புகார் அளித்தால்  கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com