''மழை நீர் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் தீவிரம்” - அமைச்சர் சேகர்பாபு

Published on
Updated on
1 min read

மழை நீர் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு கனி அங்காடியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டு மழை நீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 24 சதவீத பணிகள் முடிந்து இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் சாலை ஓரம் கடைகளை அமைக்கும் பொது மக்களின் வாழ்வாதாரம் கருத்தில் கொண்டு அதனை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். கிளாம்பக்கம்  பேருந்து நிலையம் பணிகள் முடிவடைந்து வரும் 20 தேதி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com