பின்னுக்கு தள்ளப்படும் திமுக…! அதிமுக ஆளுங்கட்சி, தவெக எதிர்க்கட்சி..!? தமிழகத்தையே புரட்டிப்போடப்போகும் 2026 தேர்தல்!!

ஒருவேளை அதிமுக பாஜக கூட்டணியில் தவெக இணைந்தால், விஜய் ....
mkstalin, vijay, eps
mkstalin, vijay, eps
Published on
Updated on
2 min read

தமிழ்நாட்டின் 2026 சட்டமன்ற தேர்தல் இதுவரை பார்க்காத மிக தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழக அரசியல் களம் தற்போது பல கோணங்களாக பிரிந்திருக்கிறது. ஆளுங்கட்சியான திமுக தனது  கூட்டணி கட்சிகளுடன் ஒரு பக்கமும் எதிர்க்கட்சியான அதிமுக - பாஜக கூட்டணி ஒரு பக்கமும் நிற்க, இதற்கு இடையில் தமிழக வெற்றி கழகம் நிற்கிறது. 

ஒருவேளை தமிழகத்தில் மும்முனை போட்டி நிலவினால் அதிமுக, திமுக, விசிக, காங்கிரஸ், நம் தமிழர், பாஜக என அனைவரின் ஓட்டையும் பாரபட்சமின்றி  விஜய் உடைப்பார் என்று சொல்லப்படுகிறது.

மேலும் விஜய் -ன் அரசியல் பிரவேசம் உண்மையில் பிரதான கட்சியான திமுக மற்றும் அதிமுக -விற்கு பெரும் பீதியை கிளப்பியுள்ளது. அதுமட்டுமின்றி, அதிமுக -பாஜக -விற்கு விஜய்யை தங்களுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்தான். ஆனால் விஜய் தெளிவாக பாஜக, திமுக, அதிமுக என ஒருவரோடும் கூட்டணி வைக்கப்போவதில்லை என கூறியிருந்தார்.

சூழலை மாற்றிய கரூர் சோகம்!

கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். எப்போதும் அவரை பார்க்க மக்கள் ஏராளமான அளவில் கூடுவது வழக்கம்.

ஆனால் கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர்.  மேலும் விஜய் பேசும்போது மைக் சரியாக வேலை செய்யாததால், பின்புறம் இருந்த கூட்டம் முழுவதும் முண்டியடித்துக்கொண்டு முன்னால் வந்து விட்டது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 41-பேர் உயிரிழந்துவிட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் குழந்தைகள் என் மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உயிரிழந்துள்ளது.

தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்திய  இந்த கோர சம்பவத்திற்கு பிரதமர் உட்பட பல தலைவர்கள் நாடு முழுவதிலிருந்தும், பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த சூழலில் விஜய் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த மாதிரியான சட்ட மற்றும் உளவியல் சிக்கல்கள் எல்லாம் விஜய் -க்கு புதிது. இந்த அமளிகளுக்கெல்லாம் இடையில் தான் விஜய் தேசிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.  இந்த கரூர் விவகாரம், அதிமுக -விற்கு குறிப்பாக எடப்பாடிக்கு ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 6 -ஆம் தேதி விஜய் -உடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி போனில் தொடர்புகொண்டு பேசியதாக தெரிகிறது. அப்போது கரூர் துயரத்திற்கு ஆறுதல் தெரிவித்து இந்த விஷயத்தில் முழு ஆதரவு தர விரும்புவதாகவும் மேலும், கூட்டணி குறித்த விஷயங்களை பேச அழைப்பு விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.  அதற்கு விஜய் -ம் பொங்கல் கழித்து சொல்வதாக சொல்லியுள்ளாராம்.

என்ன நடக்கும்!?

ஒருவேளை அதிமுக பாஜக கூட்டணியில் தவெக இணைந்தால், விஜய் ஒன்று துணை முதல்வர் பதவியை கேட்கலாம் அல்லது, திமுக -வை தோற்கடிக்கவைத்துவிட்டு 2031 தேர்தலுக்காக காத்திருக்கலாம், விஜய் தான் பாஜக -வை மோசமாக விமர்சித்துள்ளாரே… எப்படி பாஜக இருக்கும் கூட்டணிக்கு செல்ல முடியும் என்ற கேள்விகளும்  எழுகின்றன. ஆனால், அதிமுக தலைமையில் தானே ஆட்சி அமைகிறது, கூட்டணியில் இருக்கும் பாஜக -வை கண்டுகொள்ள வேண்டாம் என்கிறார்களாம்  விஜய் தரப்பு மூத்தவர்கள். 

ஏனெனில் ஆட்சியிலும் இல்லாமல் அனைவரும் பகைத்துக்கொண்டு விஜய்யால் அரசியல் நடத்தமுடியாது. அதுவும் இந்த கரூர் சம்பவத்திற்கு பிறகு நிச்சயம் அவருக்கு கூட்டணி தேவை என்ற சூழல் உருவாகியுள்ளது. ஒருவேளை விஜய் அதிமுக -உடன் இணைந்தால் அது தமிழக அரசியல் சூழலில் நிச்சயம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். திமுக ஆட்சியிலிருந்து அகற்றப்படக்கூட வாய்ப்பிருக்கிறது, அத்தகு சூழலில் விஜய் எதிர்க்கட்சி தலைவராக அமையக்கூட வாய்ப்புண்டு என்கின்றனர் நம்பத்தகுந்த வட்டாரங்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com