பாதுகாப்பு படை விமான ஒத்திகை..! சென்னையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை..!

Published on
Updated on
1 min read

சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதித்து போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் செப்டம்பர் 15 முதல் 17-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனை முறியடிக்கும் ஒத்திகை பயிற்சியை தேசிய பாதுகாப்பு படையினர் மேற்கொள்ள இருக்கின்றனர்.

அதனை முன்னிட்டு சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் வரும் 17-ம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதித்துள்ளனர்.

மேலும் ஒத்திகையின் போது அவசர ஊர்திகள் செல்வது போன்ற நிகழ்வுகள் இருக்கும் எனவும் பொதுமக்கள் அதை கண்டு அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com