வேங்கை வயல் விவகாரத்தில் ட்விஸ்ட்! 8 பேர் மறுப்பு ; 3 பேரிடம் மட்டும் டி.என்.ஏ. பரிசோதனை...!

வேங்கை வயல் விவகாரத்தில் ட்விஸ்ட்! 8 பேர் மறுப்பு ; 3 பேரிடம் மட்டும் டி.என்.ஏ. பரிசோதனை...!
Published on
Updated on
1 min read

வேங்கை வயல் கிராமத்தை சேர்ந்த 8 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு ஒப்புக் கொள்ளாததால் மீதமுள்ள 3 பேரிடம் மட்டும் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், காவலர் முரளி ராஜா உட்பட 9 பேர், இறையூர் மற்றும் கீழ முத்துக்காடு பகுதியில் தலா ஒருவர் என மொத்தம் 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன்படி, 11 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் மருத்துவமனையில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், காவலர் முரளி ராஜா, இறையூர் மற்றும் கீழ முத்துக்காட்டை சேர்ந்த 2 பேர் மட்டும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தனர். 

அதேநேரத்தில், வேங்கை வயல் கிராமத்தை சேர்ந்த 8 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு ஒப்புக்கொள்ள மாட்டோம் என சிபிசிஐடி போலீசாரிடம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இன்று ஆஜராகிய மூன்று நபர்களுக்கு மட்டும் டிஎன்ஏ இரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com