சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்...!!

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்...!!

Published on

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொள்கிறார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4ம் தேதி திடீர் மரணம் அடைந்தார்.  இதைத்தொடர்ந்து அந்த தொகுதிக்கு கடந்த மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.  இதையடுத்து மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெராவின் தந்தையும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

அவரை எதிர்த்து அ.தி. மு.க. கூட்டணி சார்பில் கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டார்.  ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார்.  அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளர்.  பதவியேற்பின் போது தமிழ்நாடு முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தார்கள்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றியை தொடர்ந்து தமிழக சட்டசபையில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி 18 எம்.எல்.ஏ.களாக உயர்ந்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com