செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு...

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு...
Published on
Updated on
1 min read

தொடர் மழை காரணமாகவும் அடுத்தடுத்து, இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதன் காரணமாக காலை முதல் 2000 கன அடியாக திறந்து விடப்பட்ட உபரி நீரானது தற்போது கூடுதலாக ஆயிரம் கன அடி உயர்த்தி 3 ஆயிரம் கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்போதைய ஏரியின் நீர்மட்டம் உயரம் 20.70 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2779 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 2000 கன அடியாக உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்ற காரணத்தால் தற்போது 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com