”20,000 கோடியை கொள்ளையடித்த செந்தில் பாலாஜி...போலி பரப்புரை செய்யும் திமுக” எடப்பாடி குற்றச்சாட்டு!

”20,000 கோடியை கொள்ளையடித்த செந்தில் பாலாஜி...போலி பரப்புரை செய்யும் திமுக” எடப்பாடி குற்றச்சாட்டு!
Published on
Updated on
1 min read

செந்தில் பாலாஜி 20 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் , எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திட்ட பணிகளை தொடங்கி வைத்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் சாணாரப்பட்டி பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், செந்தில் பாலாஜி அதிமுக-வில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, ஊழல் செய்ததாக குற்றம் சாட்டிய முதலமைச்சர் முக ஸ்டானின்,
தற்போது  அதே செந்தில் பாலாஜியை மத்திய அரசு பழி வாங்குவதாக கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், மூத்த அமைச்சர் துரைமுருகனை மருத்துவமனைக்கு சென்று பார்க்காத முதலமைச்சர், செந்தில் பாலாஜியை மட்டும் பார்க்க ஓடுவதாகவும், கொள்ளை அடித்த பணத்தில் பெரும் பகுதி முதலமைச்சருக்கு சென்று உள்ளதாகவும் தெரிவித்த எடப்பாடி, செந்தில் பாலாஜி 20 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளதாக கூறினார்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக ஆட்சிக்கு வந்தால் 100 ஏரிகள் நிரப்பும் திட்டம் மற்றும் முதியோர் உதவித் தொகைகள் வீடு தேடி வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்குவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com