8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு... அல்லேக்காக தூக்கிய தீயணைப்பு வீரர்கள்! 

நெற்பயிர்களுக்குள் கிடந்த மலைப்பாம்பை மிக பெரிய மலைப்பாம்பை மீட்டு தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்து விட்டனர். 
8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு... அல்லேக்காக தூக்கிய தீயணைப்பு வீரர்கள்! 
Published on
Updated on
1 min read

நெற்பயிர்களுக்குள் கிடந்த மலைப்பாம்பை மிக பெரிய மலைப்பாம்பை மீட்டு தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்து விட்டனர். 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் அய்யாபட்டி பகுதியில் பழனியாண்டி என்பவர் வசித்துவருகிறார். தனக்கு சொந்தமாக உள்ள வயலில் நெல் பயிரிட்டு வளர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நெல்லுக்கு இடையே மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.இந்த தகவல் அறிந்து விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com