முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு... தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவு...

திருமண ஆசைகாட்டி நடிகையை  பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளை தள்ளி வைத்துள்ளது.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு... தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவு...
Published on
Updated on
1 min read
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை சாந்தினி  அளித்த புகாரின் அடிப்படையில்,  முன்னாள் அதிமுக அமைச்சர் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மணிகண்டன் தாக்கல் செய்த மனு, நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மணிகண்டன் தரப்பில் நடிகையை காயப்படுத்தியதாக கூறுவதற்கும், தம்மால் கர்ப்பமானார் என்று கூறுவதற்கும் ஆதாரங்கள் இல்லை என்றும்,  தன்னிடம் விளக்கம் பெறாமலும் காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிடப்பட்டது 
காவல்துறை தரப்பில் ஆஜரான நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர், காவல்துறையின் அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும், அதனால் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதேபோல புகார்தாரரான நடிகை தரப்பில், மணிகண்டனுக்கு  ஜாமீன் வழங்க கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நாளை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com