ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு...!

Published on
Updated on
1 min read

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக, சென்னையில் நடைபெற இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னை தீவுத் திடலில், வருகின்ற 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான சாலைகளை பந்தய களமாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில், மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக, கார் பந்தயம் வரும் 15, 16 தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

ஆனால், புயல் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி, எந்தத் தேதியும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com