மகாத்மா காந்தி சிலைக்கு ஆளுநர், முதலமைச்சர் மரியாதை!!

Published on
Updated on
1 min read

எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 155வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் அனைத்து தலைவர்களும் காந்தியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள காந்தியடிகள் சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இதனைத் தொடர்ந்து சர்வோதய சங்கத்தினர் நடத்திய கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துக்  கொள்ள உள்ளனர்.

ஆளுநர், முதல்வரைத் தொடர்ந்து அமைச்சர்கள், சென்னை மேயர் பிரியா, துணை மேயர்  உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com