இந்த சந்திப்பின்போது, நீட் தேர்வு விலக்கு, மேகதாது அணை மற்றும் 7 பேர் விடுதலை உள்ளிட்ட தமிழக அரசின் கோரிக்கைகளை, பிரதமரிடம் எடுத்துரைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. புதிய ஆட்சியின் முதல் சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர், வலுவான மாநில அரசுகள் மூலமாகவே ஒரு வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கிட முடியும்; தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாததால், எண்ணிக்கையை உயர்த்தி வழங்க வேண்டும்; தமிழ் மொழியை இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்க ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்பன உள்ளிட்ட சில முக்கிய அம்சங்கள் குறித்து பேசியிருந்தார். அவை குறித்தும் பிரதமர் மோடியிடம் அவர் ஆலோசனை செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.