தலைமறைவான புஸ்ஸி ஆனந்த் எங்கே இருக்கிறார் தெரியுமா!? கவலையில் விஜய்..!

தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த கோர சம்பவத்திற்கு ...
vijay -bussyanand
vijay -bussyanand
Published on
Updated on
1 min read

கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். எப்போதும் அவரை பார்க்க மக்கள் ஏராளமான அளவில் கூடுவது வழக்கம்.ஆனால் கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர்.  மேலும் விஜய் பேசும்போது மைக் சரியாக வேலை செய்யாததால், பின்புறம் இருந்த கூட்டம் முழுவதும் முண்டியடித்துக்கொண்டு முன்னால் வந்து விட்டது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 41-பேர் உயிரிழந்துவிட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் குழந்தைகள் என் மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உயிரிழந்துள்ளது.

தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்திய  இந்த கோர சம்பவத்திற்கு பிரதமர் உட்பட பல தலைவர்கள் நாடு முழுவதிலிருந்தும், பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். விஜயின் பரப்புரைக்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என அனுமதி கேட்டிருந்த நிலையில் 27 ஆயிரம் பேர் வந்திருந்ததாக தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் குற்றஞ்சாட்டி இருந்தார். 

போலீஸ் அளித்த முதல் தகவல் அறிக்கையில், பரப்புரை நடந்த இடத்திற்கு விஜய் 5 நேரம் தாமதமாக வந்ததே காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த பரப்புரையில் மக்களுக்கு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனை அடிப்படையாக வைத்து விஜய் மீது வழக்கு பதிந்து விஜய் -யை கைது செய்யலாம். ஆனால் திமுக அரசு விஜயை கைது செய்ய தயக்கம் காட்டுவதாக பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், மேலும் விஜய் மீது மக்களின் கோவம் முழுமையாக திரும்பவில்லை. சிலர் இது திமுக -வின் சதி என்கின்றனர். ஆனால் சிலர் இது விஜய் -ன் தவறுதான் என்கின்றனர்.

தவெக தலைமையின் ஆளுமை குறைபாடு!!

ஆனால் இந்த பெருந்துயருக்கு பின்னர் தவெக -வின் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவர் கூட களத்தில் நிற்கவில்லை. பொதுச்செயலாளர் ஆனந்த் தொடங்கி கொ.ப.செ ராஜ் மோகன் வரை போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு ஓடி ஒளிந்துவிட்டனர். போதாக்குறைக்கு புஸ்ஸி ஆனந்தும், நிர்மல் குமாரும் முன் ஜாமீன் கோரி மனு கொடுத்திருந்தனர். ஆனால் அந்த மனுக்களும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து எந்த நேரமும் அவர்கள் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடியோ கால் செய்து பேசியிருக்கிறார். ஆனால் இந்த பெருந்துயருக்கு காரணமாக சொல்லப்படும் விஜய் மீது மக்கள் துளியும் கோவத்தில் இருப்பது போல தெரியவில்லை. இந்த சூழலில்தான் தலைமறைவாக இருக்கும் நடுக்கடலில் சுற்றிக்கொண்டிருப்பதாக தெரிகிறது. மேலும் இவர் விரைவில் போலீசில் சரணடைவார் என்றும் சொல்லப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com