
தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடரும், காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட்டுள்ளது அனுமதி மறுக்கப்பட்டால் அனுமதி கோரி போராட வேண்டிய நிலை ஏற்படும் என உழைப்போர் உரிமை இயக்கம் தெரிவித்துள்ளது.
சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் உழைப்போர் உரிமை இயக்க ஆலோசகர் வழக்கறிஞர் குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
13 நாட்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்களை பொது நல வழக்கு என்ற நாடகத்தை நடத்தி காவல்துறையின் வன்முறையை தூய்மை பணியாளர்கள் மீது கட்டவிழ்த்துள்ளனர்.
இந்த பொதுநல வழக்கை தொடர்ந்த தேன்மொழி காவல்துறையினரின் படங்களை ஆவணமாக சமர்பித்துள்ளார். இந்த வழக்கு காவல்துறையின் தூண்டுதலில் தான் தொடரப்பட்டுள்ளது.
வேறு நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தாத அரசு, இதை உடனடியாக செயல்படுத்தியுள்ளது. காவல்துறையின் அடக்குமுறை நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் கண்டித்து, கைது செய்தவர்களை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் போராட்டம் நடத்த தூய்மை பணியாளர்களுக்கு இடம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. எங்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை, போராட்டம் தொடரும். காவல்துறையிடம் போராட்டம் நடத்த அனுமதி கோரி கடிதம் வழங்கியுள்ளோம். அனுமதி வழங்கவில்லை எனில் அனுமதி கோரி போராட வேண்டிய நிலை ஏற்படும்.
காவல்துறை தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுமா அல்லது எங்களுக்கு சாதகமாக நடவடிக்கை எடுக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
தமிழகம் முழுவதும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்கள் மேலும் வலுவடையும்
திருமாவளவன் எந்த நோக்கத்துடன் அவர் கருத்துக்களை தெரிவித்தார் என்பது தெரியவில்லை தவறான நோக்கத்தில் கூறியிருக்க மாட்டார்.அவரின் ஆதரவும் எங்களுக்கு தேவை.
குப்பைகளை மனிதர்கள் சுத்தம் செய்யக்கூடாது இயந்திர மனிதர்கள் ரோபோக்கள் மூலம் தாம் அகற்ற வேண்டும் என்ற நிலை வந்தால் அதை வரவேற்கிறோம். ஆனால் குப்பைகளை மனிதர்கள் அகற்றும் வரை அவர்களுக்கு பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி சமூக பொருளாதார காரணங்களை எல்லாம் நன்கு ஆராய்ந்த பிறகு 12 ஆயிரம் தற்காலிக பணியாளர்களை மாநகராட்சி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் அதை தான் இப்போது நிறைவேற்ற வேண்டும் என நாங்கள் கோருகிறோம்.
முதல்வரை நாங்கள் ஏக வசனத்தில் பேசியதாகவும் அவர் மீது அவதூறு பரப்பியதாகவும் கூறுகின்றனர் நாங்கள் அதுபோன்று எந்த எண்ணத்திலும் போராட்டம் நடத்தவில்லை.
அதிமுக ஆட்சிக்காலத்தில் 10 மண்டலங்களை தனியார் மையம் ஆக்கிய போது எங்களிடம் பணியாளர்கள் வழக்கு தொடர கோரிக்கை வைக்கவில்லை. இவர்கள்தான் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் அதனால் தான் வழக்கு தொடர்ந்து போராட்டம் நடத்துகிறோம்" என பேசியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.