சென்னையில் திடீரென போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்...அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி!

தமிழகத்திலும், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சென்னையில் திடீரென போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்...அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி!
Published on
Updated on
1 min read

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற இளைஞர்களை போலீசார், போர் நினைவிடம் அருகே தடுத்து நிறுத்தியதால், போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 200 மேற்பட்ட இளைஞர்கள் போர் நினைவு சின்னம் அருகே கைகளில் தேசியக் கொடியை ஏந்தியவாறு அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கமிட்டனர். 

2019ஆம் ஆண்டு உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்கள், கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த எழுத்துத் தேர்விற்காக காத்திருக்கும் சூழலில், அக்னிபாத் திட்டத்தால் தாங்கள் பணியில் சேர முடியாத நிலை உருவாகி இருப்பதாக, போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்ததால் 200க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com