தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..? வானிலை ஆய்வு மையம் கணிப்பு.! 

தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..? வானிலை ஆய்வு மையம் கணிப்பு.! 
Published on
Updated on
1 min read

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது

கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. 

சென்னையை பொறுத்தவரைஅடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 10 செண்டிமீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 9 செண்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com