சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 496 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வந்தது. இதன் காரணமாக கடந்த 10-ந்தேதி காலை 6 மணியுடன் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் 49புள்ளி 92 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று வினாடிக்கு 4 ஆயிரத்து 334 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில், இன்று 4 ஆயிரத்து 496 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், நீர் இருப்பு 17 புள்ளி 76 டிஎம்சியாக உள்ளது.