

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாக காதலித்து திருமணம் செய்த நிலையில், மூன்றே நாட்களில் மணப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது தெரிய வந்ததால் புது மாப்பிள்ளை மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் அருகே பாண்டமங்கலத்தைச் சேர்ந்த குமார் மகன் ஸ்ரீதர் (34), பெங்களூரில் ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கிறார். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே சிவந்திபுரத்தைச் சேர்ந்த ராமசாமி, அமுதா தம்பதியரின் மகள் மகா ஸ்ரீ (42) ஐவரும் சென்னையில் ஐ.டி, கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ஸ்ரீதர், மகாஸ்ரீ இருவருக்கும் இன்ஸ்டாகிராமில் கடந்த ஒரு வருடத்துக்கு முன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில்இந்த நட்பு காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர். மேலும்,மகா ஸ்ரீ, தனக்கு 30 வயது என்றும் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து, திருமணம் செய்து கொள்ள மகா ஸ்ரீ வற்புறுத்தியதால் தங்களது காதலை, ஸ்ரீதர் வீட்டில் சொல்லி உள்ளார். பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் அவர்களை சமாதானப்படுத்தி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் கடந்த 30 -ம் தேதி அதிகாலையில் பாண்டமங்கலம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் திருமணம் நடந்தது. அன்று மதியம் 12:00 மணிக்கு பொத்தனூர், டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமான சமுதாயக் கூடத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினர்.
இதில் மணமகன் வீட்டார் சார்பாக உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர். பெண் வீட்டார் சார்பில் பெயரளவுக்கு ஒரு சில நபர்களே கலந்து கொண்டனர். காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியர் தங்களது குடும்ப வாழ்க்கையை உற்சாகமாக தொடங்கினர்.
மேலும் இன்டரகிராமில் தங்களது திருமண நிகழ்ச்சி விழா போட்டோ, வீடியோக்களை பதிவிட்டனர். மகா ஸ்ரீ, இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை இன்டரகிராம் மூலம் அறிந்த, முதல் கணவரின் உறவினர்கள், புதுமண தம்பதியரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை, பாண்டமங்கலத்தில் உள்ள மாப்பிள்ளை வீட்டாருக்கு காரில் வந்த முதல் கணவரின் உறவினர்கள், புதுப் மணப்பெண் மகாஸ்ரீ யை சரமாரியாக தாக்கினார். இந்நிலையில் மணமகனின் உறவினர், வந்த நபர்களிடம் விசாரித்த போது கடந்த 18 வருடத்திற்கு முன்பே மகா ஸ்ரீ, திருமணம் ஆனதும், மேலும் 15 வயதில் பெண் குழந்தையும், 13 வயதில் ஆண் குழந்தையும் இருப்பது தெரிய வந்தது. ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்தும், தனது வயதை குறைத்து கூறியும் ஏமாற்றி திருமணம் செய்தது அம்பலமானது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் மகாஸ்ரீ யின் பெற்றோர்கள் பராமரிப்பில் இருந்து வரும் இரு குழந்தைகளையும்,முதல் கணவரின் உறவினர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.இதனால் அதிர்ச்சியடைந்த புது மாப்பிள்ளை ஸ்ரீதர் குடும்பத்தினர், பரமத்திவேலுார் போலீசில் புகார் அளித்தனர். இதனால், இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த புது மாப்பிள்ளை ஸ்ரீதர் குடும்பத்தினர், புதுப் மணப்பெண் மகா ஸ்ரீ ஏற்றுக்கொள்ள மறுத்து, கட்டிய 5 பவுன் தாலி கொடியை திரும்ப பெற்றுக் கொண்டனர்.
இது குறித்து, பரமத்திவேலுார் மகளிர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி மூன்றே நாட்களில் மணமகளின் குட்டு உடைந்ததால் மணமகன் விட்டார்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த செய்தி பரமத்திவேலுார் பகுதிகளில் பரபரப்பாக பேசப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.