வருடத்திற்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு... அரசு ஊழியர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம்...

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களும் இணைந்துள்ளனர்.
வருடத்திற்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு... அரசு ஊழியர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம்...
Published on
Updated on
1 min read
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தின் நலனுக்காக தமிழக அரசு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
இதற்காக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் 4 ஆண்டுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள ஊழியர்களின் சம்பளத்தில் மாதந்தோறும் 300 ரூபாய் பிடித்தம் செய்யப்பட உள்ளது. 
இந்நிலையில் இந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மின்வாரிய ஊழியர்களும் இணைந்துள்ளனர். இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து169 மருத்துவமனைகளில். 203 வகையான சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். 
மின்வாரிய ஊழியர்கள் ஆண்டுதோறும் 5 லட்ச ரூபாய் வரையிலும் காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும்அரியவகை நோய்களுக்கு ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய் வரை சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. காப்பீட்டுத் திட்டத்தில் இல்லாத மருத்துவமனைகளில் ஏதேனும் அவசரத்தின் அடிப்படையில் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும், அதற்கான தொகை பின்னர் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டம் பொருந்தாது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com