வரும் ஜூலை 10...பள்ளி கல்வித்துறை ஆணையர் அலுவலகம் முற்றுகை...இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அறிவிப்பு!

வரும் ஜூலை 10...பள்ளி கல்வித்துறை ஆணையர் அலுவலகம் முற்றுகை...இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 10ஆம் தேதி பள்ளி கல்வித்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.


ஈரோட்டில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அப்போது, அரசு பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்த்த வேண்டும் என்றும், ஏழு ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வை உடனே வழங்கிட வேண்டும் எனவும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இந்த கோரிக்கைகளை வழங்க கோரி வரும் ஜூலை 10 ஆம் தேதி பள்ளி கல்வி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றி அறிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com