
பாட்டாளி மக்கள் கட்சி ஒரு காலத்தில் தமிழக அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தது. ஆனால் தற்போது தனது கட்சி அதிகாரத்தையே இழந்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதற்கு காரணம் வாரிசு அரசியல் தான் என்பதை நாடறிந்த உண்மை. தனது அரசியல் வாரிசாக அன்புமணியை உருவாக்கிய ராமதாஸ், மகன் ஒருகட்டத்தில் தன்னை தாண்டி சென்று விடுவார் என்பதை உணராமல் இருந்தது தான் இதற்கு காரணம்.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார், இந்நிலையில் சமீபத்தில் “அன்புமணியை எம்.பி ஆக்கி பெரும் தவறிழைத்து விட்டேன். அவர் முகுந்தன் நியமன விவகாரத்தில் தன் தாயையே பாட்டிலை தூக்கி அடிக்க சென்றவர். கட்சி இன்று இந்த நிலைமைக்கு இருப்பதற்கு காரணம் அவரிடம் தலைமைப்பண்பு இல்லாததுதான் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை சொல்லியிருந்தார்.
இது பாமக -வில் பெரும் பதட்டத்தையும், கட்சியின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் இவர்களுக்கு இடையேயான இந்த மோதல் போக்கு நிச்சயம் கட்சியை சீர்குலைக்கும் என்று தெரிந்த நலம் விரும்பிகள் பலர் தைலாபுரத்துக்கும், பனையூருக்கும் இடையே 16 கட்ட சமரச செயலில் ஈடுபட்டனர். ஆனால் எதுவும் எடுபடவில்லை.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு திண்டிவனம் ஓமந்தூரார் திருமண மண்டபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழுவில் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அன்புமணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ராமதாசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. நிறுவன தலைவருக்கு கட்டுப்படாமல் அன்புமணி செயல்படுவது கண்டிக்கத்தக்கது என பாமக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சச்சரவுகளுக்கு இடையில் சமீபத்தில் தந்து “தனது வீட்டில் லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒட்டுக்கேட்கும் கருவி ரகசியமாக பொருத்தப்பட்டிருந்தததாகவும், தமது இருக்கையின் கீழ் இருந்த அந்த கருவியை சில தினங்களுக்கு முன்புதான் அப்புறப்படுத்தியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
கடந்த வாரம் மீண்டும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுவின் தைலாபுரம் தோட்டத்து சிசிடிவி காட்சிகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு ராமதாஸ் சார்பில் சைபர் க்ரைமில் புகார் அளித்திருந்தனர்.. ராமதாசை யாரெல்லாம் சந்திக்கின்றனர் என்ற விவரத்தை சட்ட விரோதமாக சிசிடிவி மூலம் அன்புமணி கண்காணித்துள்ளதாக குற்றச்சாட்டை ராமதாஸ் தரப்பு முன்வைத்துள்ளது. மருத்துவர் ராமதாஸ் -ன் தொலைபேசி உரையாடலும் கடந்த 3 ஆண்டுகளாக ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாகவும் புகார் அளித்திருந்தனர்.
தொடர்ந்து 9 ஆம் தேதி அன்புமணி பொதுக்குழு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார், ஆனால் ராமதாஸ் தரப்பில் ஏற்கனவே 17 -ஆம் தேதி பொதுக்குழு நடக்கும் என சொல்லப்பட்டிருந்தது, இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. “அவர் எப்படி பொதுக்குழு நடத்த முடியும். நான்தான் அவருக்கு அழைப்பே விடுக்க முடியும், பாமக சட்ட விதிகளின் படி அதற்கு இடமே இல்லை. அவர் பொதுக்குழு நடத்தினால் அது தேவையற்ற வன்முறைக்கு வழி வகுக்கும், எனவே நாங்கள் அதை சட்ட ரீதியாக அணுகுவோம் என ஏற்கனவே ராமதாஸ் பேசியிருந்தார்..
அதன்படி, அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ராமதாஸால் நியமிக்கப்பட்ட மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28 -ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு கடந்த மே மாதம் 30 -ம் தேதியில் இருந்து அவர் தலைவராக செயல்பட்டு வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில தலைவரின் பதவிக்காலம் முடிவடைந்தால் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மற்றும் கட்சி நிர்வாக பொறுப்பு உள்ளிட்டவை கட்சியின் நிறுவனருக்கே உள்ளது, என கடந்த ஜூலை ஏழாம் தேதி நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது, புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு கடந்த மே மாதம் 30 -ம் தேதியில் இருந்து அவர் தலைவராக செயல்பட்டு வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில தலைவரின் பதவிக்காலம் முடிவடைந்தால் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மற்றும் கட்சி நிர்வாக பொறுப்பு உள்ளிட்டவை கட்சியின் நிறுவனருக்கே உள்ளது, என கடந்த ஜூலை ஏழாம் தேதி நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி கட்சியின் நலன் கருதி இரு தரப்பையும் நேரில் சந்தித்து நேற்று பேச அழைப்பு விடுத்திருந்தார், ராமதாஸ் காணொளி வாயிலாகவும் அன்புமணி நேரிலும் வந்து நீதிபதியிடம் பேசினர் பேச்சுவார்த்தை நடந்து முடிந்த பின்னர், அன்புமணி தலைமையிலான பொதுக்குழுவிற்கு தடை இல்லை என தீர்ப்பு வெளியாகியிருந்தது. தற்போது பொதுக்குழுவையும் கூடி மீண்டும் தலைவராகி விட்டார் அன்புமணி.
இந்த அமளிகளுக்கெல்லாம் இடையில் பாமக -வின் மகளிரணிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன, இது முடிந்த உடனேயே பொதுக்குழு கூட்டப்பட்ட உள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர் சவுக்கு சங்கருக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனக்கும் தன் மகனுக்குமான உறவு பற்றி பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்துள்ளார், அன்புமணி மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டே, களத்தில் வேலை பார்க்கவில்லை, கிராமம் கிராமமாக செல்லவில்லை என்பதுதான் ஆனால் தற்போது அவர்தான் உரிமை மீட்பு பயணம் செய்கிறாரே என கேள்வி எழுப்பினார் அதற்கு பதிலளித்த ராமதாஸ் “ இது உரிமை மீட்பு பயணம் அல்ல… என்னோடு இருக்கும் மக்களை பிரித்து, கட்சியை உறிஞ்சும் செயல், ஒருவேளை அவர் எதையாவது சாதிப்பதாக இருந்தால் அதை எப்போதோ செய்திருக்கலாம். என்னிடம் உள்ள தலைவர் பதவியை பறிக்க 16 பஞ்சாயத்துகள் நடந்தது, நான் எதையும் கண்டுக்கொள்ளவில்லை. நான் இந்த வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என்பதுதான் பஞ்சாயத்து பன்னவர்களின் கோரிக்கை. நான் பார்த்து பொறுப்பு கொடுத்தவர்கள் எல்லாம் பஞ்சாயத்து எனக்கு வந்து பஞ்சாயத்து செய்தார்கள். 16 ஆவது பஞ்சாயத்து நடந்த அன்று நான் வேலைகளை முடித்து வீடு திரும்பினேன், அன்புமணி, என் பேத்திகள் என் மகள்கள் அனைவரும் இருந்தனர், நானா அன்புமணியை பார்த்து “ போடா வெளியே என்றேன்.. உடனே இது எங்க அம்மா கட்டின வீடு என்றான்.. நான் உள்ளே சென்று ஒரு குடம் தண்ணீரை எடுத்து என் தலையில் ஊற்றிக்கொண்டு அவனை தலை முழுகினேன். 8 மணியிலிருந்து 2 மணி வரை அழுதேன். அவன் போன பிறகு தான் வெளியிலே வந்தேன்” என்றார் இதனை நினைவு கூர்ந்து தனது யூடியூப் சேனலில் பேசிய சவுக்கு சங்கரிடம், “மகளிரணி மாநாடு நடத்த ராமதாஸ் -க்கு திமுக தான் உதவுவதாக அன்புமணி குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்? என கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு “உண்மையில் அன்புமணிக்கு தான் திமுக -விற்கு உதவுகிறது. அன்புமணியை பின்னால் இருந்து இயக்குவதும் திமுக தான். ஒரு பெரிய தொகையை கிட்டதட்ட 300 கோடியை கடந்த டிசம்பர் மாதத்தில் ‘மாப்பிள்ளை சார்’ அன்புமணியிடம் கொடுத்து, நாங்கள் சொல்லும் கட்சியோடுதான் கொஊதாநி வைக்க வேண்டும் என அவரிடம் சொல்லியிருக்கின்றனர். அவரும் அதன்படி நடக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அன்புமணிக்கு பணத்தாசை இருக்கிறது என்று தெரிந்துகொண்டு திமுக அவரை பயன்படுத்தி கொள்கிறது” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.