நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பேசுகையில், தமிழகத்தில் மீனவர்களின் குறைகளை அவர்களின் பக்கம் நின்று கேட்டு நிவர்த்தி செய்து கொடுக்கும் அரசாக திமுக அரசு செயல்படுகிறது. கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, தற்பொழுது ஆளும் அரசாக திமுக இருந்தபோதிலும் மீனவர்களின் குறைகளை கேட்டு சரிசெய்யும் அரசாகத்தான் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தூத்துக்குடி துறைமுகத்தில் கூடுதல் படகு அணையும் தளத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு படகில் வெளி பொருத்தும் என்ஜின்கள் அரசின் மானிய விலையில் வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பல திட்டங்களை மீனவர்களின் நலனுக்காக அரசு செயல்படுத்தும். மீனவர்களின் கோரிக்கைப்படி விரைவில் மீனவர்களுக்கென தனி வங்கி உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.