கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!!

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!!
Published on
Updated on
1 min read

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ளி நீர்வீழ்ச்சி அருவி:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வீழ்ச்சி மற்றும் நீர் தேக்கங்களில் தண்ணீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொடைக்கானலில் உள்ள முக்கிய அருவிகளில் ஒன்றான வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பு:

வெள்ளியை உருக்கி கொட்டியது போல் காட்சியளிக்கும் அருவியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி மலை சாலையில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகளும் உருவாகியுள்ளன. பசுமை நிறைந்த வனப் பகுதியில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com