தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க நிலத்தில் இழப்பீடு வழங்கியதில் 200 கோடி ரூபாய் முறைகேடு : 83 பேரின் வங்கி கணக்கு முடக்கம்

ஸ்ரீபெரும்புதூரில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு நிலம் எடுத்து இழப்பீடு வழங்கியதில் 200 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக இழப்பீடு பெற்ற 83 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க நிலத்தில் இழப்பீடு வழங்கியதில் 200 கோடி ரூபாய் முறைகேடு : 83 பேரின் வங்கி கணக்கு முடக்கம்
Published on
Updated on
1 min read

சென்னை, பெங்களூரு நான்கு வழி சாலையை, ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பீமன்தாங்கல் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு எடுக்கப்பட்ட நிலங்களுக்கு 83 பேரிடம்  வழங்கப்பட்ட இழப்பீடு தொகை 200 கோடி ரூபாயில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. 

விசாரணையில் அந்த நிலங்கள் யு.டி.ஆர். என்ற அடிப்படை ஆவணங்களில் அனாதீனம் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலம் என்பதும், முறைகேடாக இழப்பீடு வழங்கப்பட்டதும் தெரியவந்தது. 

இதையடுத்து இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அரசு நிலத்திற்கு முறைகேடாக பட்டா பெற்று இழப்பீட்டுத் தொகை பெற்றுக்கொண்ட 83 பேரின் வங்கிக் கணக்குகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடக்கி  உத்தரவிட்டுள்ளது.மேலும் 83 பேரின் நில பட்டாக்களையும் ரத்து செய்து, அரசு நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com