பீப்...... சவுண்டுடன் போதையில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட விசிக வழக்கறிஞர்

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாருடன், மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காரையும் பறிமுதல் செய்தனர்.
பீப்...... சவுண்டுடன் போதையில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட விசிக வழக்கறிஞர்
Published on
Updated on
1 min read

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாருடன், மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காரையும் பறிமுதல் செய்தனர்.

சென்னை கொண்டி தோப்பு காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள வாகன சோதனை சாவடியில் ஒரு கார் தாறுமாறாக வந்துள்ளது. அப்போது போலீசார் அந்த காரை மறித்து சோதனை செய்த பொழுது போது காரில் வந்த நபர் அருகில் இருந்த அரசு பேருந்து மீது மோதுவது போல் சென்று வாகனத்தை நிறுத்தினர்.

தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது, தான் வழக்கறிஞர் என்று சொல்லி முகக்கவசம் அணியாமல் இருந்ததுடன், மது போதையில் காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் ராமசந்திரன் மது போதையில் தகராறு செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் தகராறில் ஈடுபட்டவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந் விஸ்வநாதன் என்பது தெரியவந்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com