கிணற்றில் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்... உடலை மீட்டு போலீசார் விசாரணை...

திருவெறும்பூர் அருகே கிணற்றில் விழுந்து இறந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின்உடலை திருவெறும்பூர் போலீசார் மீட்டுள்ளனர்.
கிணற்றில் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்... உடலை மீட்டு போலீசார் விசாரணை...
Published on
Updated on
1 min read

திருவெறும்பூர் அருகே உள்ள மாவடிகுளம் எதிரே உள்ள திரு நகர் பகுதியை சேர்ந்தவர் ராமர் இவர் முன்பு டைலர் வேலை பார்த்து வந்ததாகவும் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது மனைவி பரமேஸ்வரி (40) இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் இந்நிலையில் இவர்களுக்கு சுதர்சனம் என்ற பதினோராம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவன் என உள்ளான். இந்த நிலையில் பரமேஸ்வரி அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விடுவாராம்  பின்னர் போயி அழைத்து வருவார்கள் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பரமேஸ்வரி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை இந்த நிலையில் மாவடிகுளம் அருகே உள்ள சௌந்தர் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் ஒரு பெண்ணின் உடல் மிதப்பதாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை மீட்டு பார்த்தபோது அது பாரமேஷ்வரிதான் என்பது தெரியவந்தது. பின்னர் பரமேஸ்வரி உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com