விலையில்லா சைக்கிளை மாணவ - மாணவிகளுக்கு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

விலையில்லா சைக்கிளை மாணவ - மாணவிகளுக்கு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Published on
Updated on
1 min read

அரசுப் பள்ளி மாணவர்ளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இலவச சைக்கிள்:

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விலையில்லா இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் பிளஸ்-1 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவ - மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படவில்லை. 

நடப்பாண்டில் இலவச சைக்கிள் உண்டு:

கொரொனா தொற்று பரவல் தற்பொழுது குறைந்து காணப்படுவதால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. அதன்படி இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை இன்று தமிழ்நாடு முதல்வர் துவங்கி வைப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்:

இந்நிலையில் சென்னை மாநகராட்சி நுங்கம்பாக்கம் அரசு ஆண்கள் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில்  மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது  இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மாணவ மாணவிகளுக்கு சைக்கிளை வழங்கினார்.  முதல் கட்டமாக 6.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com