தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் இதுவரை காணாத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த தேர்தலின் தனித்துவத்தை உறுதி செய்தவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தான். இதுவரை அதிமுக - திமுக என்ற இரண்டு பிராந்திய கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தற்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த நிலை சற்று மாறியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சி துவங்கிய விஜய் திமுக -எதிர்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியிலிருந்து தனது அரசியலை முன்னெடுத்தார். அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது பல கட்ட விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அவர் அனைத்தையும் கடந்து 2 மாநில மாநாடுகளை நடத்தி முடித்திருக்கிறார். கடந்த சனிக்கிழமை திருச்சி மரக்கடையில் பிரச்சாரத்தை துவங்கிய விஜய், தொடர்ந்து மக்களை சந்திக்கிறார்,
ஆனால் அவர் கிடைக்கும் இடங்களில் எல்லாம் பேசுவது வெறும் திமுக எதிர்ப்புதான், அவர் பாஜக, அதிமுக -ஆகிய கட்சிகளை விமர்சித்தாலும் திமுக அளவிற்கு அவர் யாரையும் சாடியதில்லை. முன்னதாக நடந்த விக்கிரவாண்டி மாநாட்டில், மன்னராட்சி, ஊழலில் திளைத்த கட்சி என காத்திரமாக விமர்சித்திருந்தார்,
அதற்கு அடுத்து வந்த, மதுரை மாநாட்டில் “stalin Uncle” கேக்குதா? என பேசி மு.க.ஸ்டாலின் உருவாக்கி வைத்திருந்த “அப்பா” இமேஜை உடைத்துவிட்டிருந்தார். இப்படி தொடர்ச்சியாக விஜய் கால் வைக்கும் இடங்களில் எல்லாம் திமுக -விற்கு எதிரான விமர்சனங்களையே முன்னெடுத்து வருகிறார். விஜய் ஸ்டாலினுக்கு என்ன செய்கிறாரோ சீமானும் விஜய் -க்கு அதையேதான் செய்கிறார். சீமான் கிடைக்கும் மேடைகளில் எல்லாம் தமிழக வெற்றி கழகத்தினை வறுத்தெடுத்து வருகிறார்.
tvk என்று சொன்னாலே ‘டீ’ விக்க என்றுதான் எனக்கு கேட்கிறது. அரசியல் கொள்கையே இல்லாத அணில்கள் என கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
ஆனால் விஜய் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ‘சிங்கம் எப்போதும் செத்ததை உண்ணாது’ என சொல்லி கடந்து போகிறார். அதே போலத்தான், திமுக -வும் விஜய் தங்கள் மீது வைக்கும் விமர்சனங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.
விஜய் குறித்த கேள்விக்கு திமுக தலைமை ஒருநாளும் பதிலளித்தது இல்லை. அவர்கள் விஜய் -யை பற்றி பேசி அவரை வளர்த்துவிட்ட வேண்டாம் என்று நினைப்பதாக கூட சில அரசியல் விமர்சகர்கள் பேசியிருந்தனர். சமீபத்தில் கூட முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி சென்று வந்த பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தவெக தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்து கருத்து கூறுங்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. “அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, நான் பொதுவாக அதிகம் பேசமாட்டேன், பேச்சை விட்டு செயலில் அனைத்தும் இருக்கும்” என்று பேசியிருந்தார்.
கடந்த 13 -ஆம் தேதி திருச்சி மக்கள் பிரச்சாரத்தின்போது தமிழ் நாட்டில் திமுக -விற்கு எதிராக உள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் விஜய் எடுத்து பேசியிருந்தார். அதற்கு பிறகான முதல்வர் பேச்சுக்களில் கூட விஜயை சாடும் விதமான கருத்துக்கள் ஏதும் இல்லை.
இன்று கரூரில் திமுக -வின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “தமிழகத்திற்கு வரும் கட்சிகள் எல்லாமே திமுக -வை அழிப்போம் என்றார்கள்.
ஆனால் நம்மை அழிக்க முடியுமா? நமக்கு 70 ஆண்டுகால வரலாறு இருக்கிறது. ஏன் இப்போவும் சிலர் திமுக -வுக்கு நாங்கள்தான் மாற்று என பேசிக்கொண்டிருக்கிறார்கள். மாற்றம் மாற்றம் என்று சொன்னவர்கள் எல்லாம் மாறிப்போனாரக்ள், மறைந்து போனார்கள் . இதுதான் தமிழ்நாட்டோட politics. எடப்பாடி பழனிச்சாமி ஹானியிடம் ஆட்சி இருந்தபோது எதையுமே செய்யாமல், தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்க தெம்போ திராணியோ இல்லாமல் அடிமை சாசனம் எழுதிக்கொடுத்தார். ஆனால் பாஜக தன்னோடு இப்போதும் இருக்கிறது என வாய்துடுக்கோடு பேசிக்கொண்டிருக்கிறார். மேலும் எதிர்க்கட்சி தலைவர் என்கிற மாண்பே இல்லாமல் தரம்தாழ்ந்து என்னை ஒருமையில பேசிக்கொண்டிருக்கிறார். ரெய்டுகளிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள அதிமுக -வை அடமானம் வைத்துவிட்டார்” என எடப்பாடி பழனிச்சாமியைத்தான் தனக்கு சமமான எதிரியாக நிறுத்துகிறார். அவர் ஒருபோதும் விஜயை -தங்களுக்கு மாற்றாகவோ அல்லது தங்களை வீழ்த்தக்கூடிய சக்தி படைத்த ஒரு ஆற்றலாகவோ பார்ப்பதில்லை.
ஆனால் விஜயோ விடாது திமுக -வை துரத்தி வருகிறார். சிலர் விஜய் தனியாக புலம்பிக்கொண்டிருக்கின்றார். விஜய் -ன் பேச்சை யாரும் கேட்பதுமில்லை, மதிப்பதுமில்லை என சில ஆர்வலர்கள் பேசி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.