மோச்சா புயல் :  9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...!

மோச்சா புயல் : 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...!

Published on

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

தென் கிழக்கு வங்கக் கடலில் இன்று உருவாக உள்ள மோச்சா புயல், 5 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று மாலை 5 மணி அளவில் புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, பாம்பன், எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும், மீனவர்கள் தங்கள் படகுகளை கரைகளில் பத்திரமாக நிறுத்தி வைக்கும்படி மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டதோடு, கடற்கரை பகுதிகளில் போலீசாரின் பாதுகாப்பு பணி அதிகரிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com