அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் செய்யக்கோரி...அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் செய்யக்கோரி...அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
Published on
Updated on
1 min read

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக் கோரி வரும் 21-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக என்றாலே ஊழல், வன்முறை,  நில அபகரிப்பு, கட்ட பஞ்சாயத்து  உள்ளிட்ட பல்வேறு வன்முறை சம்பவங்கள் தான் மக்கள் அனைவருக்கும் நினைவில் வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நலன் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அதிமுக சார்பில் வருவாய் மாவட்ட தலைநகரங்களில் வரும் 21-ம் தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும் எனவும் இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com