விசிலை விழுங்கிய கயல்விழி...மருத்துவர்கள் சென்னது என்ன?

விசிலை விழுங்கிய கயல்விழி...மருத்துவர்கள் சென்னது என்ன?
Published on
Updated on
1 min read

பூந்தமல்லி அருகே,  வீட்டில் விளையாடி கொண்டிருந்த ஒருவயது குழந்தை விசிலை விழுங்கி உயிரிழந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விசிலை விழுங்கிய குழந்தை:

பூந்தமல்லி லட்சுமிபுரம் ரோடு பத்மாவதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். காய்கறி வியாபாரியான இவருக்கு வனஜா என்பவருடன் திருமணமாகி தர்சன் என்ற 3 வயது மகனும், கயல்விழி என்ற 1 வயது பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் பெண் குழந்தை வீட்டில் விளையாட்டு பொருட்களை வைத்துக்கொண்டு விளையாடி கொண்டிருந்துள்ளது. அப்போது, அருகில் இருந்த விசிலை எடுத்து பெண் குழந்தை கயல்விழி விழுங்கியுள்ளது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை கயல்விழி மயங்கியுள்ளார்.

உயிரிழந்த கயல்விழி:

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே, குழந்தையை தூக்கி முதுகில் தட்டியபோது வாயில் இருந்து விசில் கீழே விழுந்தது. இதையடுத்து தான் குழந்தை விசிலை விழுங்கியது தெரியவந்தது. இதனையடுத்து, உடனடியாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

விசாரணை செய்யும் போலீசார்:

பின்னர் குழந்தை விசில் விழுங்கி உயிரிழந்தது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன குழந்தை கயல்விழியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இருப்பினும், விளையாடும் போது குழந்தை விசில் விழுங்கி இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com